இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்யும் தேர்வுக் குழுவின் புதிய உறுப்பினர்கள் குறித்த விவரங்களை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சர்மா மீண்டும் தேர்வுக் குழு தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி சரியாக விளையாடாததை அடுத்து தேர்வுக் குழு கலைக்கப்பட்டது.

இதனை அடுத்து 5 உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக் குழு உறுப்பினர்கள் நியமனம் குறித்து நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது.

600 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் திருமதி சுலக்ஷனா நாயக், திரு அசோக் மல்ஹோத்ரா மற்றும் திரு ஜதின் பரஞ்சபே அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு நடத்திய தேர்வு செயல்முறையை அடுத்து 11 பேர் இறுதி செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய நேர்முக தேர்வின் முடிவில் ஐந்து பேர் இறுதி செய்யப்பட்டுள்ளது.

சேத்தன் சர்மா, ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரோடோ பானர்ஜி, சலில் அன்கோலா, ஸ்ரீதரன் ஷரத் ஆகிய ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

தேர்வு குழு தலைவராக சேத்தன் சர்மா செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.