தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் சாலை வழியாக வந்த 10 பயணிகளுக்கு பாதிப்பு.

சென்னையில் 124, செங்கல்பட்டில் 40 திருவள்ளூரில் 11 மற்றும் காஞ்சிபுரத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவையில் 20, கன்னியாகுமரியில் 7, சிவகங்கை 5, மதுரை 4, சேலம் மற்றும் திருநெல்வேலியில் தலா 3 பேருக்கும் திருச்சி, ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டத்தில் தலா 2 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர இத்தாலி மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த தலா ஒரு பயணிக்கும் ஹரியானா மாநிலத்தில் இருந்து வந்த 3 பேர் மற்றும் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.

இன்று மொத்தம் 14,016 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 137 ஆண்கள் 112 பெண்கள் என மொத்தம் 249 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

148 பேர் இன்று குணமடைந்த நிலையில் 1332 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.