சென்னை

மிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக தனித்துப் போட்டியிடும் என் அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள் அமமுக தலைமை அலுவலகத்தில் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  பொதுச் செய்லர் டிடிவி தினகரன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில்  துணைப் பொதுச்செயலாளர்கள் செந்தமிழன், ரங்கசாமி, பொருளாளர் மனோகரன், தலைமை நிலை செயலாளர் உமாதேவன், மண்டல பொறுப்பாளர்கள் கரிகாலன், பார்த்திபன், பாலசுந்தரம், அரூர் முருகன், டேவிட் அண்ணாதுரை, கோமல் அன்பரசு, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம்  டிடிவி தினகரன்,

“நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் அமமுக தனித்துப் போட்டியிடும். ஏற்கனவே வேட்பாளர்களின் தேர்வு ஏற்கனவே நடந்து விட்டது. முடிவுகள் இறுதி செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும்.  நாங்கள் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுத் தோற்று இருந்தாலும் மீண்டும், மீண்டும் போட்டியிடுவோம்.

நயினார் நாகேந்திரன் அதிமுக குறித்துப் பேசிய கருத்து மிகவும் சரியானது. அவர் பேசிய வார்த்தை தவறானது. இதற்கு பதில் தைரியம் இல்லை எனச் சொல்லி இருக்கலாம் . ஒரு சிறு குழந்தையைக் கேட்டாலும் அதிமுகவினர் தைரியம் இல்லாமல் இருக்கின்றனர் எனச்  சொல்லும். நயினார் நாகேந்திரன் அப்படிச்  சொல்லி இருக்கலாம்”

எனத் தெரிவித்துள்ளார்.