சென்னை

மிழகத்தில் இன்று 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 29,87,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,41,562 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,98,30,285 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாடுகளில் இருந்து 2 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 21 பேர் வந்துள்ளனர்.   இதுவரை 29,87,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 29 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,038 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 15,036 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 27,89,045 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,61,171 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 8,305 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 6,60,496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 8 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,748 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 6,528 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,90,057 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 61,691 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 2,228 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 2,143 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 2,69,050 பேர் பாதிக்கப்பட்டு 2,536 பேர் உயிர் இழந்து 2,54,920 பேர் குணம் அடைந்து தற்போது 11,594 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,01,478 பேர் பாதிக்கப்பட்டு 2,563 பேர் உயிர் இழந்து 1,81,930 பேர் குணம் அடைந்து தற்போது 16,985 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையில் செங்கல்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது.