துரை

முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ ஜி எஸ் ராம்பாபு கொரோனாவால் மரணம் அடைந்தார்.

காங்கிரஸ் கட்சியை பின்புலமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ராம்பாபு கடந்த 1960 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார்.   ராம்பாபுவின் தந்தை ஏஜி சுப்புராமன் காங்கிரஸ் சார்பில் 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு,  வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.  இவர் 1984ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யாவை எதிர்த்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

அவர் மகன் ராம்பாபு 1989, 1991 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பிலும்,  1996 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத்  தேர்வு  செய்யப்பட்டார்.  மதுரையில் ராம்பாபு மற்றும் அவரது தந்தை  ஏஜி சுப்புராமன் இருவரும் தொடர்ச்சியாக ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துள்ளனர்.

ராம்பாபு கடந்த 1998ஆம் ஆண்டு சுப்ரமணிய சுவாமிக்கு எதிராகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் . அதற்குப் பிறகு ராம்பாபு தேர்தலில் போட்டியிடவில்லை  ராம்பாபு உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா  இருப்பது கண்டறியப்பட்டது.  இதனால் அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி   அவர் உயிரிழந்தார். ராம்பாபுவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

[youtube-feed feed=1]