ஹாங்காங்

ஹாங்காங் நகரில் 38 மாடி அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தில் 300 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர்.

ஹாங்காங் நகரில் ஹாஸ்வே பே என்னும் பகுதியில் ஒரு மிகப் பெரிய அடுக்குமாடி கட்டிடம் உள்ளது.  இதில் 38 மாடிகள் உள்ளன.  இந்த கட்டிடத்தில் உணவகங்கள், உலக வர்த்தக மையத்தின் கிளை எனப் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

எப்போதும் மக்கள் கூட்டத்துடன் உள்ள இந்த கட்டிடத்தின் மின் இணைப்பு அறை திடீரென தீப்பிடித்து எறிந்துள்ளது.    அங்கிருந்த தீ வேகமாகக் கட்டிடம் முழுவதும் பரவ தொடங்கி பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.  தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்த போது பலர் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு போராடியபடி இருந்துள்ளனர்.

அவர்களைத் தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர்.   இந்த கட்டிடத்தில் மேலும் 300க்கும் அதிகமானோர் தீயில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.  இவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.   இந்த கட்டிடத்தில் பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்தும் பணியையும் தீயணைப்பு படையினர் செய்து வருகின்றனர்.