இருளர் பழங்குடியினத்தை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கிறது ஜெய் பீம் திரைப்படம். சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்தப் படம், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

படத்தைப் பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் சூர்யா மாற்றும் ஜெய் பீம் படக்குழுவினருக்கு தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

படத்தில் ராஜாகண்ணு – செங்கணி தம்பதியின் மகளாக அல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த குழந்தை, க்ளைமேக்ஸ் காட்சியில் ரசிகர்களின் மனங்களை வென்றது. இந்நிலையில் படத்தில் நடித்ததற்காக அந்தக் குழந்தையின் டிசி-யை வாங்கக் சொல்லி பள்ளி நிர்வாகம் வற்புறுத்துவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து பேசிய ஜோசிகாவின் தந்தை சக்தி, இந்த செய்தியில் கொஞ்சமும் உண்மை இல்லை. அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. ஜெய் பீம் படத்தை தொடர்ந்து வெப் சீரிஸ் ஒன்றில் அதிதி பாலன் மகளாக நடித்து முடித்திருக்கிறார். மேலும் நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. படிப்பும் நடிப்பும் தொடர்ந்து கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.