தெலுங்கு திரையுலகில் முக்கியமான குடும்பமாக திகழ்வது மறைந்த என்டிஆரினுடையது தான் .

அவரது மகன் பாலகிருஷ்ணா, ஜுனியர் என்டிஆர் அவர்களது சகோதரர்கள், சொந்தக்காரர்கள் என்று பரந்து விரிந்து தெலுங்கு சினிமாவை ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

மகன் பாலகிருஷ்ணாவிற்கு வயது 61 என்றாலும், த்ரிஷா, நயன்தாரா, ஸ்ரேயா, அஞ்சலி என ஜோடியுடன் தான் நடிப்பார் . அவருடன் ஜோடியாக நடித்தால் மார்க்கெட் இழப்பர் என ராசியும் அவருக்கு உண்டு.

பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை இயக்குநர் கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ளார்.

பாலகிருஷ்ணா – கோபிசந்த் மாலினேனி படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

முன்னதாக, கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் வெளியான ‘க்ராக்’ படத்தின் நாயகியாகவும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.