தமிழ் சினிமாவில் நடன துறையில் மிக பெரிய ஜாம்பவானாக திகழும் நடிகர் பிரபு தேவா ஒரு டாக்டர் பெண்ணை மறுமணம் செய்து கொண்டதாக தகவல் உலா வருகிறது.

முதல் மனைவி இருக்கும்போதே இவர் கடந்த காலங்களில் நடிகை நயன்தாராவுடன் காதல் சர்ச்சையில் சிக்கி மிகவும் பரபரப்பான நபராக பேசப்பட்டார்.

நடிகர் பிரபு தேவா 1995ஆம் ஆண்டு ரம்லத் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் கடந்த 2008ஆம் ஆண்டு தனது 13 வயரிதல் புற்றுநோயால் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து நடிகை நயன்தாராவுடன் காதல் உறவில் இருந்து வந்தார்.

அதனை எதிர்த்து அவரது மனைவி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து 2011ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் பிரபு தேவா. பல்வேறு மகளிர் அமைப்புகளும் நயன்தாராவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தன. இதனை தொடர்ந்து நயன்தாராவும் பிரபு தேவாவும் பிரிந்தனர்.

இந்நிலையில் இவரை பற்றிய மற்றொரு சர்ச்சை கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அதாவது இவர் அண்மையில் ஒரு டாக்டர் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வந்துள்ளது. மேலும் இருவரும் இணைந்து திருப்பதி சென்று வந்ததாக போட்டோ வெளியாகி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த லாக்டவுன் நேரத்தில் நடிகர் பிரபு தேவா, ஹிமானி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் இருக்கும் பெண் அவரது இரண்டாவது மனைவிதான் என்றும் கூறப்படுகிறது. அவர் ஒரு பிஸியோதெரபிஸ்ட் என்றும், பரிசோதனை செய்யப்போன போது அவருடன் நட்பு ஏற்பட்டு இந்தத் திருமணம் நடந்ததாகத் கூறப்படுகிறது.