டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,981 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதுடன்,  166 உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து 17,861 பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 9.45 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், புதிதாக மேலும் 15,981 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,40,53,573 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மேலும்  166 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.  இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,51,980 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்,  மேலும் 17,861 பேர் தொற்றில் இருந்து  குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,33,99,961 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,01,632 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 8,36,118 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை  97,23,77,045 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.