ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 கோடியை தாண்டியது. கொரோனா உயிரிழப்பு 49லட்சத்தை கடந்துள்ளது.

2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கி வருகிறது. டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பியா, அமெரிக்கா  நாடுகளிலும் பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள தபோதைய நிலையில், தடுப்பூசி மட்டுமே உள்ளது.  இதனால் மக்களுக்கு  தடுப்பூசி போடும் பணியை உலக நாடுகள்  முழு வீச்சில்  செயல்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் இதுவரை 240,823,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 4,904,650 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 218,076,826  பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 17,842,101 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 17,762,579 (99.6%) பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும், 79,522 (0.4%) பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன