‘கோமாளி’ இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதன் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

‘கோமாளி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ப்ரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

தற்போது ப்ரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் உறுதியாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் அவரே நாயகனாக நடித்து இயக்கவுள்ளார். இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.