விஜயவாடா
இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 20,43,244 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 11 பேர் உயிர் இழந்து இதுவரை 14108 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 1,287 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 20,15,387 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,749 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
Patrikai.com official YouTube Channel