மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் சினம், பாக்ஸர், அக்னி சிறகுகள், அருண் விஜய் 31 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். Drumsticks Productions இந்த படத்தை தயாரிக்கின்றனர். அருண் விஜய் படங்களில் அதிக பட்ஜெட் கொண்ட உருவாகவுள்ள இந்த படத்தின் ஹீரோயினாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அசுரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்த அம்மு அபிராமி நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கங்கை அமரன் நடிக்கிறார். காரைக்குடியில் அருண் விஜய் நடித்து வரும் இந்த படத்தில், கதையின் ஒரு முக்கிய திருப்பமான காட்சியில் ஜோசியராக நடித்துள்ளார்.

இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் நடிகர் அருண்விஜய்யின் 33ஆவது படமாகும். அதைக் குறிப்பிடும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கீர்த்தி சுரேஷ், பா.ரஞ்சித், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட திரையுலகச் சேர்ந்த 33 பிரபலங்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு தமிழில் யானை என்றும் தெலுங்கில் எனுகு என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]