
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் அக்ஷய் குமாரின் தாயார் அருணா பாட்டியா, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிலும் பிரபலமடைந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் அக்ஷய் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது தாயார் அருணா பாட்டியாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவர் மீண்டுவர அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் அருணா பாட்டியா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
She was my core. And today I feel an unbearable pain at the very core of my existence. My maa Smt Aruna Bhatia peacefully left this world today morning and got reunited with my dad in the other world. I respect your prayers as I and my family go through this period. Om Shanti 🙏🏻
— Akshay Kumar (@akshaykumar) September 8, 2021
[youtube-feed feed=1]