சென்னை: ‘விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்திருப்பது சரியல்ல’ என தமிழகஅரசின் நடவடிக்கைக் எதிராக மதுரை புதிய ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இந்துக்களின் புனித பண்டிகைகளில் ஒன்றானது விநாயகர் சதுர்த்தி. இந்த ஆண்டு விநாயகர்  சதுர்த்தி 10ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா பொதுஇடங்களில் நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழகஅரசின் நடவடிக்கை சரியல்ல என மதுரை புதிய ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து பரமக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது,

வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிறது அரசு. இதே சூழலை மற்ற மதங்களிலும் செயல்படுத்துவாரா என்று கேள்வி எழுப்பினார்.

”விநாயகர் சதுர்த்தி இன்றல்ல நேற்றல்ல, வெள்ளையர்களை எதிர்த்து கொண்டாடப்பட்ட விழா. அதற்கு jமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது சரியல்ல. ”விநாயகர் சதுர்த்தியை அரசு ஏற்று நடத்த வேண்டும். ஒவ்வொரு மதங்களிலும், பல்வேறு பிரிவுகள் உள்ளன.அவர்களுக்குள்ளும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆகவே, ஒரு மதத்தில் மட்டும் அனைத்து விஷயத்தையும் புகுத்துவது தவறு என்றார்.

படிக்கும் மாணவர்கள் பாஸ் மார்க் வாங்குகின்றனரோ, இல்லையோ, ‘டாஸ்மாக்’ சென்று சரக்கு வாங்குகின்றனர். இளைஞர்களை பாதுகாக்க மதுக்கடைகளை மூட வேண்டும். இன்றைய இளைஞர்கள் அரசியல் மற்றும் சினிமாவால் குழம்பியுள்ளனர் என்றதுடன்,   மத்தியில் மோடி அரசு, இந்தியாவை பாதுகாத்து வருகிறது. மோடியின் செயல்பாட்டால் லடாக் பகுதி பாதுகாக்கப்பட்டுள்ளது; இல்லையென்றால் பராக் ஆகியிருக்கும்.

இவ்வாறு அவர் கூறனிர்.