அமிதாப் பச்சனின் தனிப்பட்ட மெய்க்காப்பாளராக 2015-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த ஜிதேந்திரா ஷிண்டே ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பாதித்ததாக எழுந்த புகார்களை அடுத்து அவரை பணியிட மாற்றம் செய்துள்ளது மும்பை போலீஸ்.

விதிகளின் படி 5 ஆண்டுகளுக்கு மேல் பிரபலஸ்தர் ஒருவருக்கு ஒரே நபர் பாடிகார்டாக இருக்கக் கூடாது, ஆனால் ஷிண்டே 6 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் எக்ஸ் பாதுகாப்பு உரிமம் பெற்றவர். எப்போதும் 2 காவலர்கள் அமிதாபுக்குக் காவலிருப்பார்கள். ஷிண்டே அமிதாபுக்கு மிகவும் பிடித்த பாடிகார்டு என்று கூறப்படுகிறது.

இவர் அமிதாப்பச்சனிடமிருந்து இந்த சம்பளம் பெற்றாரா, அல்லது வேறு வகைகளில் இவர் சம்பாதித்தாரா என்பதை மும்பை போலீஸ் தற்போது விசாரித்து வருகிறது.

இந்த பிரச்சனையடுத்து தற்போது ஷிண்டே தெற்கு மும்பை காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.