டெல்லி: அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக நீட்டா டிசோஸாவை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நியமனம் செய்துள்ளார்.

அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவராகவும், முன்னாள் மக்களவை எம்.பியுமான சுஷ்மிதா தேவ், நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின்   அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். அதைத்தொடர்ந்து  நேற்று மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

இதையடுத்து, மகிளா காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராக இருந்த நீட்டா டிசோசாவை, மகிளா காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நியமனம் செய்துள்ளார்.