பிரபல பஞ்சாபி பாடகர் மன்மீத் சிங் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இடத்தில் ஆற்றில் தவறி விழுந்த விபத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மன்மீத் சிங் சமீபத்தில் நண்பர்களுடன் தர்மசாலவுக்கு சென்றுள்ளார். அங்கு கரேரி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடி உள்ளது.

மன்மீத் சிங் கால் வழுக்கி கரேரி ஆற்றில் விழுந்துள்ளார். இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மன்மீத் சிங்கை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் அவரது உடல் கரேரி ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.