சென்னை: அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், வரும் 12ந்தேதி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் விரைவில் வெளியிட இருப்பதால், அது தொடர்பாக ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக ரஜினி, தனது மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி அழைப்பு விடுத்துள்ளதாகவும்,  மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே சென்னைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தி  உள்ளதாக கூறப்படுகிறது.

அரசியலுக்கு வரப்போவதாக பல ஆண்டுகளாக தனது ரசிகர் மன்றத்தினரை ஏமாற்றி, தனது படத்தை வெற்றிப்படமாக்கி வந்த ரஜினி, கடைசியில், அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு, எஸ்கேப்பானர். இந்த நிலையில், தற்போது மீண்டும் மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்துள்ளது, விரைவில் வெளியாக இருக்கும் அண்ணாத்த படத்தின் வெற்றிக்காக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால், ரஜினி மக்கள் மன்ற செயல்பாடு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.