சென்னை: திருமணம் செய்யாமல் துணைநடிகையுடன் குடும்பம் நடத்தி ஏமாற்றியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

துணை நடிகை சாந்தினி என்பவருடன் பல ஆண்டுகளாக குடித்தனம் நடத்தி அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன்மீது,  திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் துணை நடிகை சாந்தினி புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன், சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையில் மணிகண்டன் தரப்பில், ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. .ஆனால், மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் கிளைசிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில்,  சைதை கிளை சிறையில், மணிகண்டன் மெத்தை கட்டில், பேன் என வசதியாக இருந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து, மணிகண்டனை, தற்போது  புழல் சிறைக்கு மாற்றம் செய்துள்ளனர்.