சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடனான ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் தளர்வுகளுடன் நீடித்து வருகிறது. இது வரும் 21ந்தேதி காலை 6மணியுடன் முடிவுக்கு வர உள்ளது. இருந்தாலும் தமிழகத்தின் 27 மாவட்டங்களில் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும் 11 மாவட்டங்களில் தாக்கம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீடிக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறத.

இதுதொடர்பாக  நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. நாளை காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் தளர்வுகள் வழங்குவது குறித்து நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்வார் என்றும், அதன்பிறகு, ஊரடங்கில் மேலும் அளிக்கப்படும் தளர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.