டெல்லி: மத்திய போக்குவரத்துத் துறை ஓட்டுநர் பயிற்சிக்கு புதிய விதிமுறைகளை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த புதிய விதிமுறைகள் ஜூலை 1முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுவாக ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முதலில் LLR பதிவு செய்து விட்டு,சம்மந்தப்பட்ட பயிற்சி மையத்தில் குறிப்பிட்ட நாட்கள் பயிற்சி பெற்ற பின்னர்,ஆர்.டி.ஓ அதிகாரி முன்பாக வாகனத்தை ஓட்டி காட்ட வேண்டும்.அதன் பின்னர் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
ஆனால், தற்போது மத்திய நெடுஞ்சாலைதுறை ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு புதிய விதிமுறைகளை,அறிவித்துள்ளது. அதன்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற முடியும்.
அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்தில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்தாலே ஓட்டுநர் உரிமம் பெற்று விடலாம். இதனால், இனி ஆர்.டி.ஓ அதிகாரி முன்பாக வாகனத்தை ஓட்டி காட்ட தேவையில்லை.
இந்த புதிய விதிகளானது வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இந்த புதிய நடைமுறையினால் ஓட்டுநர் உரிமம் பெரும் நடைமுறை எளிதாக்கப்படுவதுடன், 2025ம் ஆண்டிற்குள் சாலை விபத்துக்களை 50% வரை குறைக்கும் நோக்கத்திலும் இந்த புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளதாக சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]