பாரமதி

காராஷ்டிர மாநிலத்தில் உள்ள பாரமதியைச் சேர்ந்த டீ கடைக்காரர் மோடிக்கு  தாடியை ஷேவ் செய்துகொள்ளு பணம் அனுப்பி உள்ளார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைத்து தொழில்களும் முடங்கி, வேலையின்மை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது.    கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கோடிக்கணக்கானோர் கடும் துன்பங்களை அனுபவித்து வரும் நிலையிலொ பிரதமர் மோடி தாடியை நீளமாக வளர்த்து வருகிறார்.

பல ஆர்வலர்கள் வேலைவாய்ப்பு, மருத்துவ வசதிகள், பொருளாதாரம் என இந்தியாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் பிரதமர் மோடி, தனது தாடியை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக விமர்சிக்கின்றனர்.   இதன் அடிப்ப்படையில் மகாராஷ்டிர மாநிலம் பாரமதிய சேர்ந்த டீக்கடைக்கரர் அனில் மோர் பிரதமர் மோடிக்கு மணி ஆர்டரில் 100 ரூபாய் அனுப்பியுள்ளார்

அவர், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ”கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவியும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 30 ஆயிரம் நிதியுதவியும் வழங்க வேண்டும்”  என தெரிவித்துள்ளார்.

அனில் மோர் பிரதமருக்கு மணி ஆர்டர் அனுப்பியது குறித்து “நமது பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. பிரதமர் தனது தாடியை ஷேவ் செய்வதற்காக எனது சேமிப்பில் இருந்து ரூ.100 அனுப்புகிறேன். பிரதமர் மிக உயர்ந்த பதவியில் உள்ள தலைவர் என்பதால் நான் அவரை காயப்படுத்த விரும்பவில்லை.

அதே வேளையில் கொரோனா தொற்றால் ஏழைகளின் பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  அதில் அவரது கவனத்தை ஈர்ப்பதற்காக நான் இதைச் செய்கிறேன்.  தனது தாடியை பிரதமர் மோடி நன்கு வளர்த்துக்கொண்டுள்ளார்.

ஆனால் அவர் எதையாவது வளர்க்க வேண்டும் என்றால், அது இந்த நாட்டு மக்களுக்கான வேலைவாய்ப்பாக இருக்க வேண்டும். அல்லது மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அல்லது நாட்டில் தற்போதுள்ள மருத்துவ வசதிகளை அதிகரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

ஏற்கனவே கொரோனா முதல் மற்றும் தற்போது இரண்டாம் அலையால் அமல்படுத்தப்பட்ட இரண்டு பொதுமுடக்கங்களால் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட துயரங்களிலிருந்து விடுபடுவதை பிரதமர் உறுதிப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.