டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவராக உருது கவிஞர் இம்ரான் பிரதாப்கர்தி நியமித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உத்தரவிட்டு உள்ளார்.

அகில காங்கிரஸ் கட்சியின் சார்பில், 5 மாநிலங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  அதையடுத்து அகில இந்திய  காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவராக  இம்ரான் பிரதாப்கர்தி நியமிக்கப்பட்டு இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் , அகில இந்திய  காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவராக  பிரபல உருது கவிஞர் இம்ரான் பிரதாப்கர்தியை நியமித்து உள்ளார். இந்த அறிவிப்பு உடடினயாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு முன்னாள் தலைவர் நதீம் ஜாவேத்தின் பங்களிப்பை கட்சி பாராட்டுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.