திஸ்பூர்: அசாமில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அசாம் மாநிலத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதனையடுத்து, பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந் நிலையில் அசாம் முழுவதும் இன்று முதல் மே 1ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel