சென்னை

மிழகத்தில்  இன்றைய (30/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 2,342 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,094 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,700 பேர் உயிர் இழந்து 8,56,548 பேர் குணம் அடைந்து தற்போது 14,846 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,48,031 பேர் பாதிக்கப்பட்டு 4,236 பேர் உயிர் இழந்து 2,37,900 பேர் குணம் அடைந்து தற்போது 5,895 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 58,679 பேர் பாதிக்கப்பட்டு 693 பேர் உயிர் இழந்து 56,599 பேர் குணம் அடைந்து தற்போது 1,387 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 56,073 பேர் பாதிக்கப்பட்டு 815 பேர் உயிர் இழந்து 53,692 பேர் குணம் அடைந்து தற்போது 1,566 பேர் சிகிச்சையில் உள்ளனர்.