அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘ஜிந்தாபாத்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரெஜினா மற்றும் ஸ்டெபி படேல் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் பெரும் பொருட்செலவில் உருவாகிறது.

ஆன் இன் ஆல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ராஜசேகர், கலை இயக்குநராக சக்தி வெங்கட்ராஜ் மற்றும் எடிட்டராக சாபு ஜோசப் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது இந்த படத்தின் நிறைவடைந்துள்ளது என்று படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் விறுவிறுப்பாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் அகில இந்திய திரையரங்க உரிமையை 11 : 11 ப்ரோடுக்ஷன்ஸ் கைப்பற்றியுள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]