கே.ஜி.எப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கும் படத்திலும் நடிக்கிறார் பிரபாஸ். Homable films இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படமும் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நடந்துள்ளது.

இதில் முக்கிய விருந்தினர்களாக யாஷ் உள்ளிட்ட சில முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ட்ரெண்ட் அடித்து வந்தது .

இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தின் ஷூட்டிங், சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இதன் ஷூட்டிங்கை கோலார் தங்க வயலில் தொடங்க முடிவு செய்திருந்தனர். பின்னர் அந்த லொகேஷனை மாற்றினர்.

தெலங்கானாவில் உள்ள கோதவரிகணி நிலக்கரி சுரங்கங்களில் இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது. இது நக்சலைட்டுகள் அதிகமாக உள்ள பகுதி என்பதால் ராமகுண்டன் போலீஸ் கமிஷனர் வி. சத்யநாராயணாவை சந்தித்த படக்குழு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, சுமார் 40 போலீசார், படப்பிடிப்புக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனர்.

‘சலார்’ திரைக்கு வருவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீல் இதுகுறித்து ட்விட்டர் பதிவில், “வரும் 2022 ஏப்ரல் 14-ஆம் தேதி சலார் திரைப்படம் உலகெங்கும் வெளியாகவிருக்கிறது. சலார் திரைப்படத்தை உங்களுடன் கொண்டாடும் இந்த தருணத்துக்காக எங்களாலும் காத்திருக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

https://twitter.com/prashanth_neel/status/1365963626977239044