ஐதராபாத்: ஆந்திராவில் 12 மாநகராட்சிகள் மற்றும் 75 நகராட்சிகளுக்கான தேர்தல் தேதிகளை அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் நிம்மகட்டா ரமேஷ் குமார் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனாவிக்கு பின் நிலைமை சீரடைந்துள்ளதால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சித் தேர்தல் தற்போது நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
12 மாநகராட்சிகள் மற்றும் 75 நகராட்சிகளுக்கான வாக்குப் பதிவுகள் மார்ச் 10ம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் நடைபெறாத தொகுதிகளுக்கு மார்ச் 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மார்ச் 14ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Patrikai.com official YouTube Channel