கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.

ஏற்கனவே தமிழகத்தில் அம்மா உணவகம் மூலம் சலுகை விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை பின்பற்றி தற்போது மேற்கு வங்கத்திலும் 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்துள்ளார். 5 ரூபாய்க்கு மதிய உணவு என்ற சூப்பர் திட்டத்தை அம்மாநில மக்கள் வரவேற்று உள்ளனர் .