சென்னை:
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்பு செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செம்மர கட்டைகள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இந்த கட்டைகளில் காரிலும், ரெயிலும் கடத்த வந்ததாக செய்திகள் வந்த வண்ணம் இருந்து வருகின்றன. கடந்த வாரத்தில் காரில் கடத்தி செல்லப்பட இருந்த ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், படுக்கை விரிப்புகளுக்குள் மறைத்து பார்சல் கட்டி கடத்த முயன்ற 500 கிலோ செம்மரக்கட்டைகள் சிக்கின. சிங்கப்பூர் செல்லும் சரக்கு விமானத்தில் ஏற்ற இருந்த போது சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel