சென்னை: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 578 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 555 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணி, கடைசி 2 விக்கெட்டுகளை இழந்து 23 ரன்களை சேர்த்தது.

அந்த அணி கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம்(218) அடிக்க, டாம் சிப்ளி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பெரிய அரைசதம் அடித்தனர். கூடுதலாக கிடைத்த ரன்கள் மட்டும் 45 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சார்பில், அஸ்வின் மற்றும் பும்ராவுக்கு தலா 4 விக்கெட்டுகள் கிடைத்தன. இஷாந்த் மற்றும் நதீம் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தற்போது தனது முதல் இன்னிங்ஸை துவக்கியுள்ள இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 15 ரன்களைச் சேர்த்துள்ளது.