
சென்னை: ஆண்டுதோறும் தமிழக தலைநகரில் நடைபெறும் தென்னிந்தியப் புத்தகக் கண்காட்சி, இந்த 2021ம் ஆண்டில், பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு கண்காட்சியும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திலேயே நடைபெறுகிறது என்று பபாசி அறிவித்துள்ளது. காலை 11 மணிமுதல் இரவு 8 மணிவரை கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நடைபெறும் கண்காட்சி, 44வது புத்தகக் கண்காட்சியாகும்.
எப்போது புத்தகக் கண்காட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று பலர் காத்திருந்தனர். இந்நிலையில், புத்தகக் கண்காட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பபாசி. இதனால் புத்தகப் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel