நேற்று பிக்பாஸ் வீட்டில் அனிதா மற்றும் ரியோவின் சண்டை முத்தியது. வாக்குவாதத்தில் துவங்கிய இந்த சண்டை, பெரிய பஞ்சாயத்தாக மாறியது. அனிதாவிடம் சண்டை போட்டவர்கள் பலர் வெளியில் போய்விட்டார்கள் என ரியோ கூறி கிண்டல் செய்தார். சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா என ஒரு பெரிய லிஸ்டையே ரியோ கூறினார்.

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீடு கோழிப் பண்ணையாக மாறி இருக்கிறது. அதில் போட்டியாளர்கள் சிலர் கோழிகளாகவும் மற்றவர்கள் நரிகளாகவும் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். கோழிகள் தங்களின் தங்க முட்டைகளை நரிகள் தொடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், கோழியிடம் இருந்து முட்டைகளை எடுக்க நரி கூட்டமாக தான் வரும் என்று ஆரம்பிக்கிறார் அர்ச்சனா. declare பண்ணாம வரக்கூடாது என்று கூறுகிறார் ஆரி. Declare முறை ரூல் புக்கில் இல்லை என்று எடுத்துரைக்கிறார் ரம்யா.