சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 1,235 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய பாதிப்புகளுடன் சேர்த்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,96,475 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 307 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்று ஒரு நாள் மட்டும் 17 பேர் நோய்த் தொற்றால் பலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 11,870 ஆக உயர்ந்துள்ளது.
1,311 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டு மொத்தமாக இதுவரை மொத்தம் 7,74,306 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 10,299 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
[youtube-feed feed=1]