பிக்பாஸ் வீட்டின் நேற்றைய காலை ஆரி, அனிதா, பாலாஜி, ஷிவானி ஆகியோர் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசினர். அப்போது ஆரி, ஒருத்தர ஒருத்தர் காப்பாத்தி விளையாடுறாங்க. அவங்க எல்லாம் உள்ள இருக்காங்க. இன்டிவிட்ஜூவலா விளையாடுறவங்கலாம் வெளியே போயிட்டு இருக்காங்க என்று அர்ச்சனா கேங்கின் தவறான விளையாட்டை பற்றி ஆதங்கத்துடன் கூறினார்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், புதிய மனிதா டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. பாலாஜி மனிதர்களின் தலைவராகவும், அர்ச்சனா இயந்திரங்களின் தலைவராகவும் அறிவிக்கப்பட்டார். பிக்பாஸ் வீடு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்பட அரங்கு போல் காட்சியளிக்கிறது.

இந்த டாஸ்கில் அர்ச்சனா முகத்தில் முட்டையை பூசிக்கொள்ள வைக்கின்றார் ஆரி. அப்போது அர்ச்சனா கண்ணில் இருந்து கண்ணீர் வருவது முதல் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில் கோபத்தின் உச்சிக்கே செல்கிறார் அர்ச்சனா. அர்ச்சனாவின் இச்செயலால் அதிர்ந்து போய் உள்ளது பிக்பாஸ் வீடு.