இந்த வாரம் சனிக்கிழமை எபிசோடில் போட்டியாளர்கள் அனைவரையும் வறுத்தெடுத்தார். யாரும் டாஸ்க் சரியாக செய்யவில்லை என்ற காரணத்திற்காக அவர் அனைவரையும் விளாசினார். சிங்கப்பூர் பட்டிமன்றத்தில் பேசிய நிஷா இப்போது எங்கே, அவர் பிக் பாஸ் வீட்டுக்கு வராமல் வேறு யாரோ வந்திருப்போது போல இருக்கிறது என கூறி விமர்சித்தார்.

இப்படியிருக்க இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சனம், அனிதா, ஷிவானி ஆகிய மூவரில் யார் தங்கவேண்டும் என்று பரிந்துரை செய்ய சொன்னார் கமல். ஹவுஸ்மேட்ஸ் பலர் சனத்திற்கு ஆதரவாக பேசினார்கள். ஆரியை கேட்கும் போது அனிதா தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று வெளிப்படையாக கூறினார்.

இரண்டாம் ப்ரோமோவில், ஹெல்த் செக்கப் போனது குறித்து விசாரிக்கிறார் கமல். அப்போது பேசிய அர்ச்சனா, பெர்ஃபார்மன்ஸ் ஹெவியானதினால் சந்தேகம் அதிகமாயிடுச்சு என்று கூறுகிறார். நான் ஒரு ரகசியம் சொல்கிறேன் என்று பேசிய கமல், நிஷா சேஃப் என்ற மகிழ்ச்சியான செய்தியை கூறுகிறார்.