Skip to content
  • Fri. Jul 10th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

Oct 30, 2020

சென்னை:  சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து,  15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.


இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது.  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கோவை, சேலம் மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது.  தற்போதைய நிலையில், மாநிலம் முழுவதும் தற்போது 24,886 பேர் சிகிச்சையில் உள்ளனர். தற்போதைய நிலையில்,  தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 19,403 பேராக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 4087 பேரையும் சேர்த்து, இது வரை 6 லட்சத்து 83,464 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 35 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,053 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று புதிதாக 756 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 148 பேர், திருவள்ளூர் 146, கோவையில் 251, ஈரோடு 124, சேலம் மாவட்டத்தில் 170 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த 6 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,98,487 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 7,628 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை  3626 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  1,87,233 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில்,  எசென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

கோடம்பாக்கம் – 561 பேர்
அண்ணா நகர் – 601 பேர்
தேனாம்பேட்டை – 505 பேர்
தண்டையார்பேட்டை – 301 பேர்
ராயபுரம் – 412 பேர்
அடையாறு- 477 பேர்
திரு.வி.க. நகர்- 502 பேர்
வளசரவாக்கம்- 283 பேர்
அம்பத்தூர்- 375 பேர்
திருவொற்றியூர்- 119 பேர்
மாதவரம்- 177 பேர்
ஆலந்தூர்- 242 பேர்
பெருங்குடி- 265 பேர்
சோழிங்கநல்லூர்- 111 பேர்
மணலியில் 118 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Post navigation

அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…
ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா உறுதி

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer