இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ராஜமெளலி, ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முழுமையாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். சிலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அதை வெளியே சொல்லாமலே வீட்டில் தனிமைப்படுத்திக் குணப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பாலிவுட்டின் பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கர் வசிக்கும் கட்டிடத்துக்கு நேற்று (29.08.20) மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டதாகவும், பாடகி லதா மங்கேஷ்கர் நலமுடன் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.