கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் நேற்று மாலை காலமானார்.

இவர் மறைவுக்கு பல அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .

அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .

இந்தக் கொரோனாவுக்கு இவ்வளவு வலிமை இருக்கிறதா… அனைவரையும் கொன்று தீர்த்துவிடுகிறது. இன்னும் பயமாக இருக்கிறது. எவ்வளவு நல்லவர்களை தூக்கிட்டுப் போகப் போகிறதோ. பிரயோஜனம் இல்லாத மனிதர்களைக் கொண்டு போ. அதில் கூட எனக்கு உடன்பாடு கிடையாது என உருகியுள்ளார் .

மிகவும் சுறுசுறுப்பானவர், புத்திசாலி. எல்லோருக்கும் எல்லாப் பொருட்களும் சென்றடைய வேண்டும் என்று தவணை முறைகளில் ரொம்பப் பிரமாதமாகச் செய்து பெயரெடுத்தவர். உலகம் முழுக்க வசந்த் அண்ட் கோ என்றால் தெரியும். உலகில் தமிழர்களுடைய பெயர்களை நிலைநாட்டியவர்களில் முக்கியமானவர் வசந்தகுமார்.

ஒரு எம்.பி., நாடாளுமன்றத்தில் தன் கடமையைச் செய்தவர், சட்டப்பேரவையில் தன் கடமையைச் செய்தவர். அரசியலில் மாறுபட்ட கருத்து இருக்குமே தவிர, எந்த அரசியல்வாதியையும் வசந்தகுமார் வெறுத்ததில்லை. அனைவருடனும் தோளோடு தோள் சேரும் பழக்கமுள்ளவர் என கூறியுள்ளார் .