இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, சபாநாயகர் தனபாலை கடிந்த உச்சநீதிமன்றம் ஒரு மாதத்திற்குள் முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற அறிவுரையின்படி, தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால், துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 11 பேரிடமும் நாளை காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது