சென்னை:  தமிழகத்தில்  இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக இன்று 9,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39 பேர் உயிரிழந்துள்ளனர்.  இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் 2வது அலை தீவிரமடைந்து உள்ளது. தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வந்தாலும், மக்களின் மெத்தனம் காரணமாக தொற்று பரவல் கைமீறி  சென்றுவிட்டதாக சுகாதாரத்துறையினர் கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மேலும் 9,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட  நிலையில், கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 80 ஆயிரத்து 728 (9,80,728) ஆக  உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 2884 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையில் மொத்தம் 280184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் 5,263 பேர் தொற்று பாதிப்பில் இருந்து  குணமடைந்துள்ளனர். இதன் மூலம்  மொத்தம் 9,02,022 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி  39 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 13,071 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 17 பேர்  அரசு மருத்துவமனையிலும், 22 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலையில், 65,635 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை 2,10,77,500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று  மட்டும் 1,00,804 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,92,042 பேர் ஆண்கள், 3,88,650 பேர் பெண்கள்,  . இன்றைக்கு மட்டும் 3,665 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்றைக்கு மட்டும் 5,679 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 30 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி  செய்யப்படவில்லை.