டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில், சிகிச்சையின் காரணமாக பாதிப்பிலிருந்து குணமடைந்து வருவது அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைவோர் 77.7 சதவிகிதம் என்றும், அதிக பட்சமாக சென்னையில் 91% கொரோனா நோயாளிகள் குணமடைந்து வருவதாகவும் தெரி வித்து உள்ளது. அதுபோல, சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 சதவீதமாக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்ட்டு, நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை 77 புள்ளி 7 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இதுவரை இல்லாத வகையில், 81 ஆயிரத்து 533 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இவர்களில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, உத்திரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை, தற்போது கட்டுப்படுத்தப் பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும், இதுவரை 1 லட்சத்து 46 ஆயிரத்து 593 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 772 பேர் (91 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை சிகிச்சை பலனின்றி 2,942 பேர் உயிரிழந்துள்ளனர். இது வெறும் 2 சதவிகிதம் மட்டுமே.
அதுபோல, சிகிச்சை பெற்று வருவோர்எண்ணிக்கை 10,879 ஆக, அதாவது 7 சதவீதமாக குறைந்துள்ளது.
சென்னையில் இதுவரை இதுவரை 11 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தினமும் 12 ஆயிரம் பேருக்கு மேல் பரிசோதனைசெய்யப்படுகிறது.
தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட பகுதிகள் எண்ணிக்கையும் 11 ஆக குறைந்து உள்ளது.
தற்போது கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு 12-ம் தேதி (நேற்று) நிலவரப்படி அதிகபட்சமாக 1,171பேர் சிகிச்சையில் உள்ளனர். அடுத்தபடியாக அண்ணா நகர் மண்டலத்தில் 1,084 பேர், வளசரவாக்கம் மண்டலத்தில் 931 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தொற்று குறைவாக உள்ள மண்டலமாக மணலி உள்ளது. அங்கு 140 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.
Patrikai.com official YouTube Channel