டெல்லி: மகாராஷ்டிரா, பஞ்சாப், கா்நாடகா உள்ளிட்ட  5 மாநிலங்களில் 84.49 சதவீதம் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:  இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 46,951 புதிய பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 30,535 பேரும், பஞ்சாபில் 2,644 பேரும், கேரளாவில் 1,875 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

தற்போது 3,34,646 போ் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 24 மணி நேரத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 25 ஆயிரம் பேர் அதிகரித்துள்ளனர்.

குணமடைந்தவா்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 1,11,51,468-ஆக (95.75 சதவீதம்) பதிவாகியுள்ளது. 24 மணி நேரத்தில் 21,180 போ் புதியதாக குணம் அடைந்துள்ளனா். கொரோனா தொற்றுக்கு மேலும் 212 பேர் பலியாகி உள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.