தஞ்சாவூர்: தமிழகத்திலேயே, பள்ளி மாணாக்கர்களுக்கு கொரோனா பாதிப்பில், தஞ்சை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே பல பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலருக்கு தொற்று பாதிப்பு உறுதியான நிலையில், இன்று புதிதாக மேலும் 2 பள்ளிகளில் 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இன்று தமிழகத்தில் நேற்று மட்டும் 1,437   பேருக்கு தொற்று உறுதியனாது. இதன் காரணமாக, தொற்று பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை  8,69,804  ஆக உயர்ந்துள்ளது.தற்போதை யநிலையில், 9,145 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று  9 பேர் தொற்று காரணமாக மரணம் அடைந்துள்ளதால்,   இதுவரை கொரோனா உயரிழப்பு 12,618  ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சாவூரில் நேற்று 67 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு இதுவரை 18,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அங்கு ஏற்கனவே பல பள்ளிகளில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த நிலையில்,  புதிதாக மேலும் 2 பள்ளிகளில் 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருப்பானதாள் அரசு உதவி பெறும் பள்ளியில் 3 பேருக்கும், திருவையாறு அமலராஜ் பள்ளியில் 4 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதித்த பள்ளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது.