அபோதாபாத்: பாகிஸ்தானில் ஜீப் பள்ளத்தில் விழுந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வடமேற்கு பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நிலை தடுமாறிய ஜீப் ஒன்று பள்ளத்தில் கவிழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 3 வயது குழந்தையும், 6 பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

15 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கலியாத் டிஎஸ்பி கூறியதாவது: விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் பாண்டிமைரா பகுதியில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். வாகனத்தை அதிவேகமாக இயக்கியதே விபத்துக்கான காரணம் என்பது தெரிய வந்துள்ளது என்றார்.