புதுடெல்லி:
ர்வதேச யோகா தினம் நாளை கொண்டாப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

7 வது சர்வதேச யோகா தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் நடக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

இதுகுறித்து, ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், டெல்லியில் நடக்கவுள்ள சர்வதேச யோகா தின கொண்டாட்டம், காலை 6:30 மணி முதல் துார்தர்ஷன் ‘டிவி’ சேனல்களில் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்ற உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.