மும்பை: மகாராஷ்டிராவில் புதியதாக 6,417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மகாராஷ்டிராவில் மொத்தம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 16,38,961 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று மட்டும் 137 பேர் பலியாகியுள்ளனர்.
இன்று கொரோனாவில் இருந்து 10,004 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் மொத்தம் 43,242 பேர் பலியாகியுள்ளனர், 14,55,107 பேர் குணமடைந்து இருக்க, 1,40,198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.