கட்டாக்:
டிசா மாநிலத்தில், அதே பகுதி வாலிபரால் கற்பழிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமிக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள். 8 நாள் தொடர்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் மாவட்டத்தில் உள்ள  ஜெகன்னாத்பூர் கிராமத்தை  சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 21-ந்தேதி திடீரென தலைமறைவானார். இதுகுறித்து அந்த கிராமத்தினர் பல இடங்களில் தேடிய நிலையில்,  அந்த ஊரில் உள்ள பள்ளிக்கூடத்துக்குள் மயங்கிய நிலையில் அந்த சிறுமி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  அவளது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன.

இதையடுத்து அந்த சிறுமியை அருகிலுள்ள சேல்பூர் நகர மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியை கொடூரமாக தாக்கி, வன்புணர்வு செய்திருப்பதாக தெரிவித்தனர். இதன் காரணமாக அந்த சிறுமியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தது வந்தது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக,  அதே ஊரைச் சேர்ந்த 25 வயது இளைஞரை கைது போக்சோ சட்டத்தின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுமி இன்று பரிதாபமாக சிகிச்சை பலனின்றி இறந்தாள். இது அநத பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.